தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
சென்னை காசிமேட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், சேந்தமங்கலம், நீடாமங்கலம், மன்னார்குடியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்து விழுந்ததால் மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன.
மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தபோது நூலிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வயல்களில் வெள்ளம் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலும், பூம்புகார் துறைமுகத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
கடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு உபகரணங்களுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.