தமிழ்நாடு செய்திகள்
மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக 'டிட்வா' புயல் மாறிவிட்டது - வெதர்மேன் பிரதீப் ஜான்
- டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது.
- தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று மாலை சென்னையை நெருங்கும்போது புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.