தமிழ்நாடு செய்திகள்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் உள்பட 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

Published On 2025-06-10 07:54 IST   |   Update On 2025-06-10 10:40:00 IST
  • செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
  • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சென்னை:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News