தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் காங்கிரஸ் தேய்கிறதா.., யானை மாதிரி- செல்வப் பெருந்தகை

Published On 2025-09-26 18:46 IST   |   Update On 2025-09-26 18:46:00 IST
  • என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.
  • திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே,உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு செல்வப் பெருந்தகை பதில் அளித்ததாவது:-

எல்லோருக்கும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை உள்ளது. அவரவர் கருத்துகனை தெரிவிக்கின்றனர். எந்த கருத்து சொன்னாலும் காங்கிரஸ் மேலிடத்தில் அதை சொல்லி விடுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் முடிவு எடுக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும். இது குறித்து பேசுவார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம். திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போய்ட்டாங்க. தற்போது செங்கோட்டையன் போய்க்கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல். அதில் ஏற பயந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யார் போவார்கள் என்று தெரியாது. பயத்தில் அச்சத்தில் அங்கு இருக்கிறார்கள். 5 தேர்தல்களில் தொடர் தோல்வி.. 6-வது தேர்தலில் இன்னும் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக தழுவப் போறாங்க.

தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது. உங்களுக்கு ஏன் இந்த பேராசை, நப்பாசை. 20 ஆயிரம் கமிட்டிகளை போட்டிருக்கோம். அதற்கான Database (தரவுகள்) மேலிடத்தில் உள்ளது. ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து கமிட்டிகளை போட்டிருக்கோம்.

வேலூர் மாவட்டத்தில் கிராம கமிட்டி உள்ளது. கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் என ஒருவரை அறிமுகம் செய்துள்ளேன். காங்கிரசை பற்றி குறைத்த மதிப்பிடாதீர்கள். இது யானை மாதிரி. எந்திச்சி நின்னுன்னு வச்சிங்கோங்க, என்ன நடக்கும்..,

விஜய் பற்றி கேள்வி கேட்காதீர்கள்.

இவ்வாறு செல்லப்பெருந்தகை பதில் அளித்தார்.

Tags:    

Similar News