தமிழ்நாடு செய்திகள்

மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-07 13:23 IST   |   Update On 2025-08-07 13:23:00 IST
  • தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
  • பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்.

சென்னை:

மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News