தமிழ்நாடு செய்திகள்

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-25 07:12 IST   |   Update On 2025-06-25 07:12:00 IST
  • இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட சமூக நீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்.
  • ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றை திரிபுகளால் மாற்றுவது அடிமைத் தனத்துக்கே வழிவகுக்கும் முயற்சி.

சென்னை:

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!

ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என்று கூறியுள்ளார். 



Tags:    

Similar News