எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
- தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
சென்னை:
ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்களை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயகம் திரும்பினார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி இருக்கிறேன். வெற்றிப்பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன.
* இதுவரை சென்ற பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம் இது.
* பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
* தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
* முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.