தமிழ்நாடு செய்திகள்

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்..!

Published On 2025-06-24 15:24 IST   |   Update On 2025-06-24 15:24:00 IST
  • கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடங்களில் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தன.
  • தற்போது 9 பெட்டிகள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

9 பெட்டிகளாக இருந்த புறநகர் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News