தமிழ்நாடு செய்திகள்
சென்னை புறநகர் ஏ.சி. ரெயில் சேவைகளுக்கு பயணிகளிடம் வரவேற்பு அதிகரிப்பு: தெற்கு ரெயில்வே
- ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 1488 ஆக இருந்தது.
- ஜூன் மாதத்தில் 2800 ஆக அதிகரித்துள்ளது.
பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து பெட்டிகளும் ஏ.சி. வசதி கொண்ட ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த ரெயிலுக்கு நாளுக்குநாள் பயணிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 1488 ஆக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 2800 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.