தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து- பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு

Published On 2026-01-31 07:16 IST   |   Update On 2026-01-31 07:16:00 IST
  • பாதயாத்திரை பக்தர்கள் மீது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் மோதியது.
  • விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், சேலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே விபத்தில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் 4 பேர் பலியாகினர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சாலையில் நடந்து சென்ற சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் மீது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர். விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், சேலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சென்னை திருசூலத்தை சேர்ந்த கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News