தமிழ்நாடு செய்திகள்

சென்னை - மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-09-19 13:03 IST   |   Update On 2025-09-19 13:03:00 IST
  • வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
  • மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

சென்னை ஐகோர்ட்டு, சுங்க இலாகா அலுவலகம், மும்பை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே செயல்படும் மத்திய சுங்க இலாகா தலைமை அலுவலகம், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

இதேபோல், மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் ஐகோர்ட்டு வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் கிடைக்கவில்லை.

மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News