தமிழ்நாடு செய்திகள்

தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Published On 2025-05-17 14:18 IST   |   Update On 2025-05-17 15:09:00 IST
  • 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.
  • 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

சென்னை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த ஜியா குமாரி, 10-ம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 467-ம், தமிழில் 93 மதிபெண் எடுத்து அசத்தி உள்ளார்.

இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறுகையில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

* பள்ளியில் கோச்சிங் சிறப்பாக இருந்தது. தினமும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.

* 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.

* சொந்த ஊர் பீகார். படிப்பிற்காக இங்கு வந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள்.

அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.

* வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம். அப்பாவிற்கு தமிழ் தெரியாது. அம்மாவிற்கு தமிழ் தெரியும்.

* 17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது.

* அதிக மார்க் எடுக்க ஆசிரியர்களும் உதவி செய்தார்கள்.

* பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.

* 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

* அப்பா வெல்டிங் வேலை செய்கிறார்கள்.

* தமிழ்நாட்டில் இருந்துதான் நாம் ஏதாவது ஆக வேண்டும் என்றும், graduate, doctor ஆன பிறகு தான் ஊருக்கு போகணும் என்றும் அப்பா சொல்லி இருக்கிறார்கள். அம்மா மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.

* பீகாரில் education குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜியா குமாரியின் பேட்டி வெளியான நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News