அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் - உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ.
- எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
- அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை கட்டி உள்ளாரே ரெட்டி அவரைப்போல அய்யாவாலும் பெரிய ஆளாக வந்திருக்க முடியும்.
அன்றைக்கு எங்கேயோ ஒரு டாக்டர் தான் இருப்பார்கள். இன்றைக்கு ஊர் ஊருக்கு டாக்டர்.
யாரால் ஊர் ஊருக்கு டாக்டர். எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
இன்று வெள்ளை சட்டை போட்டு இருக்கிறேன் என்றால் அது என் தம்பி எடுத்துக்கொடுத்தது. நான் வந்த கார் என் தம்பி வாங்கி கொடுத்தது. இதையெல்லாம் தம்பி வாங்கி கொடுத்தான் என்று தான் பேரு. ஆனால் அதற்கு காரணம் குலதெய்வம் மருத்துவர் அய்யா.
இப்படிப்பட்டதெய்வத்தை ஒரு நிமிடம் கூட நாம் மறந்தோம் என்றால் நாம் அழிந்து போவோம்.
இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் மருத்துவர் அய்யாவை தெய்வமாக பார்க்க வேண்டும். அய்யா சொல்வதை செய்ய தயாராக இருக்கிறோம். அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
நீங்கள் எனக்கு மேயர் சீட், எம்.எல்.ஏ. சீட், இன்னும் பல பதவிகள் கொடுத்தீர்கள், இன்றைக்கு இணைப்பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவி கொடுத்து உள்ளீர்கள்.
அய்யா அவர்கள் விரும்பியது இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டிற்காகத்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சொல்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் கிடையாது. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, பொறுப்பு மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மருத்துவர் அய்யா மட்டும் தான்.
அருள் உன் உயிர் எனக்கு வேண்டும் என்று அய்யா சொன்னால் இந்த டி.வி.க்காரர்கள் முன்னாடி என் கழுத்தை அறுத்துக்கொண்டு சாவதற்கு தயாராக உள்ளேன்.
என்றைக்கும் என் தலைவர்... என் உயிர் உள்ளவரை, என் மகன் உள்ளவரை, என் குடும்பம் உள்ளவரை மருத்துவர் அய்யா நீங்கள் மட்டுமே என்று கூறினார்.