தமிழ்நாடு செய்திகள்
தேர்தல் பொறுப்பில் இருந்து விலகும் அண்ணாமலை
- நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாக தெரிவித்தார்.
- தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் அமைக்கப்பட்டு இருந்த தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை நியமித்து இருந்தது.
இந்த நிலையில், கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும் என்றார்.