ராணிப்பேட்டை, வேலூரில் அன்புமணி ராமதாஸ் 2 நாட்கள் நடைபயணம்
- படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
வேலூர்:
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25-ந்தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மாலை அவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வருகிறார். அங்குள்ள படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவன கழிவுகள் கொட்டப்பட்டு வைத்திருக்கும் பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு ஆற்காடு நகரப் பகுதியில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து வருகிற 4-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் செய்து தனது முதல் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அன்புமணி ராமதாஸ் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை 7-ந்தேதி மீண்டும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து தொடங்குகிறார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.