தமிழ்நாடு செய்திகள்
#RajyasabhaElection மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
- தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தேர்வு.
- வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு.
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, பாமக வேட்பாளர் அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.