தமிழ்நாடு செய்திகள்
10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
- வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.