தமிழ்நாடு

பழனி அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது

Published On 2023-08-23 04:35 GMT   |   Update On 2023-08-23 05:03 GMT
  • இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
  • கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி:

பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.

நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News