தமிழ்நாடு

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-07-30 08:19 GMT   |   Update On 2023-07-30 08:19 GMT
  • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது.
  • புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பிரிவு, சர்வேயர் பிரிவு, பதிவேடுகள் பாதுகாப்பு பிரிவு, இ-சேவை மையம், தனி வட்டாட்சியர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பழமை கட்டிடத்தின் மேற்பகுதி சேதம், இட நெருக்கடி, மற்றும் பொது மக்களுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை த்தொடர்ந்து பொன்னேரி- திருவொற்றியூர் சாலை வேன்பாக்கத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.06 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. தற்போது இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் காணப்படுகிறது.

இதனால் புதிய கட்டிட அலுவலகம் முன்பு புதர் மண்டியும், தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News