தமிழ்நாடு

கனமழை எதிரொலி- தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2024-01-05 14:29 GMT   |   Update On 2024-01-05 14:29 GMT
  • தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
  • மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அம்மாவட் ஆட்சியர் அறிவறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News