தமிழ்நாடு

வெங்கையா நாயுடு

பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு- குடியரசு துணைத் தலைவர்

Published On 2022-08-01 02:26 GMT   |   Update On 2022-08-01 03:01 GMT
  • ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
  • சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்பட வேண்டும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

ராஜஸ்தான் இளைஞர் சங்கம் செயல்படுத்தும் புத்தக வங்கி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் கடனாக வழங்கப்படுகின்றன.

அதனை பெறும் மாணவர்கள் அந்த புத்தகங்களை இந்த ஆண்டு படித்து முடித்து பின்னர், அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்க முடியாமலோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமலே பின்தங்கி விடக்கூடாது.

தேச வளர்ச்சியின் வேகத்திற்கு மிக பெரிய உந்து சக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும், ஆக்கப் பூர்வமான ஆற்றல்களையும் பயன்படுத்தி இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் சேரும்.

அதிக மக்கள்தொகை தரும் நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் பரந்த தொகுப்பை மிக திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அதை திரும்பக் கொடுப்பதுதான் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

நம்முடையது பரந்த தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News