தமிழ்நாடு

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வைகோ கடிதம்

Published On 2022-11-08 09:42 GMT   |   Update On 2022-11-08 09:42 GMT
  • விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர்.
  • கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது.

சென்னை:

இந்திய வெறியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். கப்பல் தொடர்பு எண் 870776789032.

எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்பு கொண்டு, கடற்படை மீட்பு கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News