தமிழ்நாடு

விபத்து நடந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி: தற்கொலையா? என போலீசார் விசாரணை

Published On 2023-07-20 06:30 GMT   |   Update On 2023-07-20 06:30 GMT
  • ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
  • 2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்:

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை ரெயில் தண்டவாள பகுதியில் இன்று அதிகாலை 2 வாலிபர்களின் உடல் சிதறி கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த அவர்களின் விவரம் குறித்த எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவர்களது சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்தது. அதனை தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரெயில் படியில் நின்று பயணம் செய்யும்போது 2 பேரும் தவறி விழுந்து இறந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News