தமிழ்நாடு செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீதா காட்டு மாடு ஈன்ற குட்டி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 காட்டு மாடுகள் குட்டிகளை ஈன்றன

Published On 2022-09-16 13:55 IST   |   Update On 2022-09-16 13:55:00 IST
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • முதலைகள் 45 குஞ்சுகளை பொரித்துள்ளன.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வார நாட்களில் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சீதா என்ற காட்டுமாடு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. இதேபோல் 25 வயதான புனிதா என்ற காட்டுமாடு கடந்த மாதம் பெண் குட்டியை ஈன்றது. இந்த 2 குட்டிகளும் அதன் தாய்களுடன் விளையாடி திரிகிறது. இதை சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து செல்கிறார்கள்.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 69 சதுப்புநில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முதலைகள் 45 குஞ்சுகளை பொரித்துள்ளன. இந்த முதலை குஞ்சுகளை காகம், பறவைகள் தூக்கி செல்லாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட கூண்டில் தனியாக வைத்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த முதலை குஞ்சுகளுக்காக சுற்றி கம்பி வேலி பொருத்தப்பட்ட கூண்டு தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் அந்த கூண்டில் முதலை குஞ்சுகள் விடப்பட உள்ளது.

Tags:    

Similar News