தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்கள்

Published On 2024-01-07 15:28 GMT   |   Update On 2024-01-07 15:28 GMT
  • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.
  • மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் 10 முதலீடுகள் குறித்து பார்ப்போம்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.12,082 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,500 வோலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஜேஎஸ்டபுள்ழு நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6600 வேலை வாய்ப்புகள் உருவாகும். 

ஹூண்டாய் நிறுவனம் ரூ.6180 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வாய்ப்புகள் உருவாகும்.

பர்ஸ்ட் சோலார் நிறுவனம் ரூ. 5600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.

பெகட்ரான் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

மிட்சுபிஷி நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு- திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவீத பெண் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு.

குவல்காம் நிறுவனம் ரூ.177 கோடி முதலீடு- சென்னையில் 1600 வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு.

Tags:    

Similar News