தமிழ்நாடு

திருப்பூரில் கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2023-06-18 04:48 GMT   |   Update On 2023-06-18 04:48 GMT
  • பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர்.
  • கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பத்மினிகார்டன் 1-வது வீதி பகுதியில் நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ராக்கியா பாளையம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ தினேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

அவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அவர் சிறையும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் சிறையில் இருந்த போது, அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி முன்விரோதமும் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர். அவரும் சென்றுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்திய கும்பல் தினேசை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News