தமிழ்நாடு
தென் மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு
- ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.
- தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம்.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.
* தெலுங்கானாவில் 10 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.
* ஆந்திராவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். ஆந்திராவில் கூட்டணியில் இணைவதற்கான சூழல் அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.
* கர்நாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளோம்.
* தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம் என்று அவர் கூறினார்.