தமிழ்நாடு

கோப்புப்படம் 

தமிழகத்தில் ஜன.8 வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2024-01-03 03:21 GMT   |   Update On 2024-01-03 03:21 GMT
  • அதிகாலையில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகாலையில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாளை (ஜனவரி 4, ஜனவரி5) மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதே போன்று இன்று நாளை முதல் ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News