தமிழ்நாடு

ராமனுக்கு தடை போட்டால் மக்கள் பக்தியாலும், சக்தியாலும் தகர்க்கப்படும்: கவர்னர் தமிழிசை எச்சரிக்கை

Published On 2024-01-23 04:41 GMT   |   Update On 2024-01-23 04:41 GMT
  • ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....
  • எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

சென்னை:

தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"

பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"

ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்".

அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா "ராம்"

ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"

அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை

வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி

அதுவே நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....

எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்...

எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை அங்கு தேடி மோடி வந்தார்....

11 நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....

சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை

சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து

ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க

ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....

இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு

அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....

வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று... வென்று பெற்றவர்களுக்கு

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....

என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News