தமிழ்நாடு

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்- விஜயபாஸ்கர் பங்கேற்பு

Published On 2024-01-24 06:19 GMT   |   Update On 2024-01-24 06:19 GMT
  • தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
  • தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விராலிமலை:

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் ஆவின் சேர்மன் பழனியாண்டி, அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் மணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந் தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News