தமிழ்நாடு செய்திகள்

நீர் பிடிப்பில் தொடர் மழை: 52 அடியை எட்டிய வைகை அணை நீர் மட்டம்

Published On 2023-10-10 11:54 IST   |   Update On 2023-10-10 11:54:00 IST
  • தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது.
  • சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 121.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 121.60 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 835 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1105 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2945 மி.கன அடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 52 அடியை எட்டியது. நீர் வரத்து 616 கன அடி. தண்ணீர் திறப்பு 69 கன அடி. இருப்பு 2259 மி.கன அடி.

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது. ஏற்கனவே தேனி, திண்டுக்கல் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 54 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 413.15 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 0.8, போடி 24, வைகை அணை 40, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 38, அரண்மனைப்புதூர் 27.2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News