தமிழ்நாடு

திருநாவுக்கரசர் எம்.பி.யை கண்டித்து காங்கிரசார் முற்றுகை போராட்டம்

Published On 2023-10-18 08:10 GMT   |   Update On 2023-10-18 08:10 GMT
  • ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி காங்கிரஸ் அருணாச்சலம் மன்றத்தில் ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி , பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் கோட்ட மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போராட்டக்காரர் திடீரென்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டித்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

Tags:    

Similar News