தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...
ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு
தென்காசி மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பூங்கா அமைக்கப்படும்.
சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு. முதல் மூன்று விவசாயிகளுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சூரியகாந்தி, செம்பருத்தி, ரோஜா உற்பத்தியை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு
மா உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி, வாழை உற்பத்திக்கு ரூ.12.73 கோடி, பலா சாகுபடிக்கு ரூ.1.14 கோடியும் ஒதுக்கீடு