தமிழ்நாடு

தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- தினகரன்

Published On 2024-01-17 07:53 GMT   |   Update On 2024-01-17 07:53 GMT
  • ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை.
  • விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர்.

கடலூர்:

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் நானும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்து தற்போது செயல்பட்டு வருகின்றோம்.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை. தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.


விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர். ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை செயல் படுத்தும் நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு மாறுபட்டதால் தற்போது எதிர்ப்பு காட்ட வில்லை.

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழக கவர்னர் வெளியிட்டதை பார்த்தால் அவர் போல் செயல்படவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை திரும்ப பெற வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News