தமிழ்நாடு செய்திகள்
பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் திறப்பு
- கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.
- பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் மழை காரணமாக கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.
இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பரங்கிமலை மெட்ரோ ரயில்நிலையம் வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் (08.12.2023) பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
— Chennai Metro Rail (@cmrlofficial) December 8, 2023