தமிழ்நாடு
- கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.