மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
- தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மிச்சாங்' புயல் வரும் 5-ந்தேதி கரையை கடக்க உள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
* தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
* அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
* சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.