தமிழ்நாடு செய்திகள்

மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2023-12-02 16:51 IST   |   Update On 2023-12-02 16:55:00 IST
  • தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மிச்சாங்' புயல் வரும் 5-ந்தேதி கரையை கடக்க உள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

* தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

* அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

* சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News