தமிழ்நாடு

தி.மு.க.விடம் ஒரு தொகுதி கேட்ட ம.ம.க

Published On 2024-03-02 04:58 GMT   |   Update On 2024-03-02 05:23 GMT
  • எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.
  • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது:-

* 2013-ம் ஆண்டு முதல் தி.மு.க. கூட்டணியில் பணியாற்றி வருகிறோம்.

* வரும் பாராளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

* எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.

* இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.

முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News