தமிழ்நாடு செய்திகள்
சோழவரம் அருகே குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- ஊராட்சி தலைவர் நர்மதா யோகேஷ்குமார் உடனிருந்தார்.
- சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அடங்கிய பெரியகுளம்.
பொன்னேரி:
சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அடங்கிய பெரியகுளம், மாயாண்டி குளம், சின்ன குளம், சுண்ணாம்புகுளம், ஆகிய 4 குளங்களின் கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் முன்னிலையில் அகற்றினர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் நர்மதா யோகேஷ்குமார் உடனிருந்தார்.