தமிழ்நாடு

ஈரோட்டில் நூதன பிரச்சாரம்- இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க ஓ.பி.எஸ் புதிய திட்டம்

Published On 2023-02-15 08:05 GMT   |   Update On 2023-02-15 08:05 GMT
  • நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்.
  • ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ஏன் என்பதற்கு விரிவான விளக்கம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை நேரில் கேட்கவும், இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு அலைபேசி குரல் பதிவின் மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ஏன் என்பதற்கு விரிவான விளக்கம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 20ம் தேதி சென்னையில் ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News