தமிழ்நாடு

திடீர் நெஞ்சுவலி.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை

Published On 2023-08-12 15:07 GMT   |   Update On 2023-08-12 15:07 GMT
  • உடல்நலக்குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி.
  • ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், அவரை 24 மணி நேரம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேலம் மாட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷூக்கு அங்கிருந்து சென்னை திரும்பும் தருவாயில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

பிறகு அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், அவரை 24 மணி நேரமும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். 

Tags:    

Similar News