தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,107 கன அடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3,864 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 4,107 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 63.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 63.45 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 27.32 டி.எம்.சியாக உள்ளது.