தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 334 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-10-25 09:15 IST   |   Update On 2023-10-25 09:15:00 IST
  • கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது.
  • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 19 அடி உயர்ந்து உள்ளது.

நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4 ஆயிரத்து 334 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News