தமிழ்நாடு செய்திகள்

கனமழை- 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2023-12-17 10:15 IST   |   Update On 2023-12-17 10:15:00 IST
  • மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
  • ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏர்வாடி வணிகர் தெருவில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் குடியிருப்புவாசிகள் தவிப்பு அடைந்துள்ளனர்.


இதுபோல ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது.

இதனைதொடர்ந்து பல்லாரி மற்றும் பலசரக்கு பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மழை நீர் சாலையை மூழ்கடித்தபடி ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர். போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வாறுகால் கடந்த 10 ஆண்டு ளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், வணிக வளாகங்களை சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News