தமிழ்நாடு

தி.மு.க. வேட்பாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்- தலைமைக் கழகம் ஏற்பாடு

Published On 2024-03-21 07:36 GMT   |   Update On 2024-03-21 07:36 GMT
  • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
  • கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் (22-ந்தேதி) காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News