தமிழ்நாடு

தொழில் நிறுவனங்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு: பிரேமலதா

Published On 2023-12-23 05:14 GMT   |   Update On 2023-12-23 05:14 GMT
  • தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
  • ஆங்காங்கே நடைபெறும் போராட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள தொழில்துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. பீக்கவர் மின் கட்டணமாக ரூ.3500 கட்டாயமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள மின் கட்டண உயர்வால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தொழில் நிறுவனங்கள் சார்பில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்து உள்ளதோடு, ஆங்காங்கே நடைபெறும் போராட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News