தமிழ்நாடு

கொள்ளையனை பிடித்து தரும் போலீஸ், துப்பு தரும் பொதுமக்களுக்கு தலா ரூ.1 லட்சம்- டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Published On 2022-08-14 07:04 GMT   |   Update On 2022-08-14 07:04 GMT
  • போலீசாருக்கு மட்டும் நேற்று ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
  • தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை:

ரூ.20 கோடி நகைகளுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வங்கி ஊழியர் முருகனை பிடிக்க வசதியாக அவனது போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. அவசர தகவல் அனுப்பி இருக்கிறார். போலீஸ் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தும் படியும், வாகன சோதனை, சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.

குறிப்பாக வடமாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் இருந்தால் பிடித்து விசாரிக்க வேண்டும்.

கொள்ளையர்களை பிடித்துக்கொடுக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

நேற்று போலீசாருக்கு மட்டும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.

தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News