தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
- ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது.
- பணத்தை இழந்த கல்லூரி மாணவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 20). இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுபற்றி ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.