தமிழ்நாடு செய்திகள்

சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Published On 2024-01-09 14:45 IST   |   Update On 2024-01-09 14:45:00 IST
  • ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகள் இம்மாதத்தில் வெளியிடப்படும்.
  • அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

* கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் சான்று இனி நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

* கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.

* வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி பெறுவதில், பல இடர்பாடுகளைக் களைந்து நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும்.

* ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகள் இம்மாதத்தில் வெளியிடப்படும்.

* ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு.

* அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

* கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்தும் வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்.

* அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News