தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும்

Published On 2024-01-14 04:22 GMT   |   Update On 2024-01-14 04:22 GMT
  • போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
  • வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனி பனிமூட்டம் நீடிக்கும்.

தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

அதன்படி போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பனிமூட்டத்தால் திணறிவரும் வாகன ஓட்டிகள் அதிக புகைமூட்டமும் கூடியதால் அவதியடைந்தனர்.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கும்.

அதேபோல் வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனிமூட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News